ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எல்லையோர மாவட்டமான பூஞ்சில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோரை இழந்த 30 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல்காந்தி, அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் எல்லையைத் தாண்டி பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் […]