மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ​​மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேயின் அலுவலகத்தில் […]

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளுக்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ 21 ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது. இது அடுத்த கால் பகுதியின் தொடக்கம். வளர்ந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதற்கான இந்த 25 ஆண்டுகளின் முக்கிய காலகட்டம் தொடங்கியுள்ளது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் […]