ரிசர்வ் காவல் படையில் 20,000 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்கள் நியமனம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரிசர்வ் காவல்படையில் 20,000 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்கள் நியமனம் குறித்த பத்திரிகை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது தொடர்பாக ரிசர்வ் காவல் படை அல்லது ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ அல்லது மின்னணு ஊடகங்களிலோ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என பிஐபி தெரிவித்துள்ளது. போலி […]
PIB
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.. இதனால் அன்றாட பணிகள் கூட ஆன்லைனில் முடிக்கப்படுகிறது.. டிஜிட்டல் மயமாக்கலில், குறிப்பாக வங்கித் துறையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. வாடிக்கையாளர்கள் சிறிய பணிகளுக்காக செய்ய வங்கிக்கு வெளியே வரிசையில் நிற்க வேண்டிய நாட்கள் போய்விட்டன. எனினும் டிஜிட்டல் முறையில் பல்வேறு நூதுன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.. பல வங்கி வாடிக்கையாளர்கள் ஹேக்கர்களின் மோசடிகளுக்கு எளிதில் இரையாகின்றனர். […]
போலி செய்திகளை வெளியிட்டு வந்த 6 YouTube சேனல்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையை கண்டறியும் பிரிவு, நடத்திய ஆய்வில் 6 யூ-ட்யூப் சேனல்கள் ஒருங்கிணைந்து தவறான தகவல்களை பரப்பியதை கண்டுபிடித்துள்ளது. இதற்கென 6 தனி ட்விட்டர் கணக்குகளை கையாண்டு சேனல்களில் தவறான தகவல் பரப்பலை இந்தப்பிரிவு முறியடித்துள்ளது. மத்திய தகவல் மற்றும் […]
ஜனவரி 1, 2023 முதல் ரூ.1000 நோட்டுகள் திரும்ப வரும் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஜனவரி 1, 2023 முதல் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு வரும் என்ற செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான PIB Fact […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக பரவி வரும் தகவல் போலியானது என்று அரசு விளக்கமளித்துள்ளது. ஜூலை 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. செப்டம்பர் 20, 2022 தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையால் வெளியிடப்பட்ட கடிதத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் […]