கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான காலியிடம் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் சிறிய அறை ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார். இதனை கவனித்த பொதுமக்கள், உடனடியாக காட்டூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், எறிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். […]

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.52 மணி அளவில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோரிப்பாளையம் மதிச்சியம் பகுதியில் கள்ளழகரை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அதோடு அங்கே காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். இத்தகைய நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பாக அதிகாலை 4 மணி அளவில் மதுரை அரசு மருத்துவமனை வினவருக்கு செல்லும் பகுதியில் 2 குழு மோதிக்கொண்டது. […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குறும்பபட்டியைச் சேர்ந்தவர் கோபால் இவருடைய மகன் வடிவேல்(29).இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பனியில் பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி தொழிலாளர் தினம் என்பதால் விடுமுறை முன்னிட்டு அவருடைய வீட்டிற்கு வந்து 2 நாட்களாக பழனியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று காலை பழனி பேருந்து நிலையம் முன்பு அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது சில மர்ம […]

வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி கொடுப்பதாக தெரிவித்து பொதுமக்களிடம் சுமார் 6000 கோடி மோசடி செய்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஏற்கனவே 6 பேரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் அந்த நிறுவனத்தின் முக்கிய […]

காதல் என்பது ஒருவித உணர்வு அதனை கட்டாயப்படுத்தியோ மிரட்டியோ ஒருவருக்கு இன்னொருவர் மீது வரவைத்து விடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அந்த அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் வளர்மதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இத்தகைய நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் […]

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இருக்கின்ற துக்கிரால நகரை சேர்ந்த ஒரு மாணவி அரசு பொறியியல் கல்லூரியில் பி டெக் 2ம் ஆண்டு படித்து வருகின்றார். அந்த மாணவியும் அதே பகுதியைச் சேர்ந்த அனுதீப் என்ற இளைஞரும் ஒருவரை, ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருட காலமாக தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டு […]

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்துள்ள வற்றாபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னராசு. இவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சோமசிபாடி கிராமத்தில் செவிலியராக பணியாற்றி வரும் சூர்யா(32) என்ற மனைவியும், லட்சன்(4), உதயன்(1) உள்ளிட்ட இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், சின்ன ராசுவுக்கும், அவருடைய மனைவி சூர்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கணவன், […]

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(50). இவருடைய மகள் ரம்யா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்ற நபருக்கும் இரு வீட்டு உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுமணப்பெண் ரம்யா தன்னுடைய கணவருடன் தாய் வீட்டிற்கு விருந்து சாப்பிடும் நிகழ்விற்கு சென்றுள்ளார். உறவினர்கள் வெளியே இருந்த சமயத்தில் வீட்டில் இருந்த […]

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த மனதில் நான் தனியார் கல்லூரி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருகிறேன். எனக்கு துணைவேந்தர் பதவி வாங்கி தருவதாக தெரிவித்து ஒரு சிலர் 1 கோடி ரூபாய் கேட்டனர். ஆண் அவர்கள் கூறிய மூன்று வங்கி கணக்குகளில் 95 லட்சம் ரூபாயை செலுத்தினேன். ஆனால் எனக்கு துணைவேந்தர் பதவி வாங்கி கொடுக்கவில்லை என்று […]

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (38) இவர் லாரி ஓட்டுனராக இருந்து வருகிறார். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும் மணிகண்டன் (12) சஞ்சனா(6) கிஷோர்( 3) என்ற 3️ குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த 2ஆம் தேதி இவர்களின் மூன்றாவது குழந்தையான கிஷோர் வீட்டில் உள்ள படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்திருக்கிறார். அதன் பின்னர் […]