இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) இடையே மிகப் பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது.. இதனால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களில் கிட்டத்தட்ட 97 சதவீதத்திற்கு விதிக்கப்படும் சுங்க வரிகளை குறைக்கவோ அல்லது முற்றிலும் நீக்கவோ முடியும். இதனால், விவசாயம், கார் உற்பத்தி போன்ற பல துறைகளில் உள்ள பொருட்கள் இந்தியர்களுக்கு எதிர்காலத்தில் மலிவாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய பொருட்களின் […]

கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்தகலி ஜீவோட்டம் மடத்தில் 77 அடி உயரமுள்ள ராமரின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்புவிழா, மடத்தின் 550ஆம் ஆண்டு கொண்டாடப்படும் ‘சார்தா பஞ்சஷதமனோத்ஸவா’ விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்றது. கோவா பயணத்தின் போது இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றேர். மேலும், புதிதாக அமைக்கப்பட்ட ராமாயணத் தீம் பூங்காவையும் மோடி திறந்து வைத்தார். ராமர் […]

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 4-5 தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டிற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்காகவும் புடின் இந்தியா வருவார் என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு […]

அயோத்தி ராமர் கோவிலில் நடந்த கொடி ஏற்ற விழா குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) கடுமையாக கண்டித்துள்ளது. சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கிய நீண்ட வரலாறு கொண்ட பாகிஸ்தானுக்கு, பிறரைப் பற்றி பாடம் புகட்ட எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசிய போது, “பாகிஸ்தான் போலியான மதசார்பற்ற போதனைகளை வழங்குவதற்குப் பதிலாக, […]

பிரதமர் நரேந்திர மோடி குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.. இவை வலுவான ஜனநாயகத்திற்கான அடித்தளங்கள் என்று அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்பு தினத்தை ஒட்டி குடிமக்களுக்கு எழுதிய கடிதத்தில், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பொறுப்பையும் பிரதமர் வலியுறுத்தினார், மேலும் 18 வயது நிரம்பிய முதல் முறையாக வாக்களிப்பவர்களை கௌரவிப்பதன் மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அரசியலமைப்பு தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று […]

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை பீகாரில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார்.. முசாபர்பூரில் நடந்த இந்தியா கூட்டணியின் பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் “ நீங்கள் மோடி ஜியை வாக்குகளுக்காக நாடகம் செய்யச் சொன்னால், அவர் அதை செய்வார். நீங்கள் அவருக்கு வாக்களித்து மேடைக்கு வந்து நடனமாடச் சொன்னால், அவர் நடனமாடுவார்.” என்று தெரிவித்தார்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மாநில […]

பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 8 புதன்கிழமை நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (NMIA) முதல் கட்டத்தை திறந்து வைத்தார். இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையம் என்ற பெருமையை இந்த விமான நிலையம் பெற்றுள்ளது.. ஆண்டுக்கு 2 கோடி பயணிகளை இந்த விமான நிலையம் கையாளும் என்றும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவி மும்பை விமான நிலையத்தில் எப்போது […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து பாவ்நகரில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய பிரதமர், தன்னம்பிக்கையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் “இன்று, இந்தியா ‘விஸ்வபந்து’ உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுதான் நமது மிகப்பெரிய எதிரி, ஒன்றாக நாம் இந்தியாவின் இந்த எதிரியை, […]

சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்த பாடகர் ஜூபீன் கார்க்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “பிரபல பாடகர் ஜூபீன் கார்க்கின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்தேன். இசைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் […]

பஹாவல்பூரில் பயங்கரவாதத் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினரை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் தாக்குதலை நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.இ.எம்) தளபதி ஒப்புக்கொண்டதிலிருந்து பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் போலித்தனம் வெளிப்பட்டுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் தாரில் ‘பி.எம். மித்ரா பூங்கா’வைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் “ இன்று, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் உண்மையை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள், […]