சென்னையில் திரைப்பட பாணியில் கல்லூரியில் தங்கி படிக்கும் இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய 20 வயது கல்லூரி மாணவியை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்த புரோக்கர் காதலரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த ஹை டெக் விபச்சார சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் சொகுசு விடுதியில் மூன்று இளம் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு விபச்சாரத்தில் […]
prostitution
வட அமெரிக்க நாடான கனடா நாட்டில் செயல்பட்டு வரும் பாலியல் குழுக்களிடம் தங்களின் குழந்தைகள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கனடாவைச் சார்ந்த சமூக ஆர்வலர் மிச்செல் பியூர்கியூலே. கனடா நாட்டைச் சார்ந்தவரான இந்த சமூக ஆர்வலர் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த கொடுமையான அனுபவங்களை பகிர்ந்து இது போன்ற அனுபவங்கள் உங்களது பிள்ளைகளுக்கும் நிகழாமல் இருக்க அவர்களை கண்காணித்து வாருங்கள் என […]
தேனி மாவட்டத்தில் இருந்த கிராமம் ஒன்றில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்துவது போல் விபச்சாரம் செய்து வந்த கும்பலை தேனி மாவட்டம் போலீசார் கைது செய்திருக்கின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட அழகர்சாமிபுரம் என்ற கிராமத்தில் நூதனமான முறையில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு […]
வர வர தமிழகம் மும்பையை போல மாறி வருகிறது. அதாவது, மும்பை ரவுடிசத்துக்கு பெயர் போன ஒரு நகரம், அதே சமயம் விபச்சாரத்திற்கும் இந்த நகரம் பெயர் போனது தான் .மும்பையில் விபச்சாரம் சட்டப்படி நடைபெற்று வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் விபச்சாரம் என்பது மும்பையில் ஒரு குற்றச்செயல் ஆகாது. தற்போது தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு சம்பவங்களை வைத்து யோசித்துப் பார்த்தால், வரும் காலங்களில் தமிழகமும் மும்பையை போல […]
சென்னை அய்யாவு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இளைஞர்கள் சிலர் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டுக்கு இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றது உறுதியானது. இதையடுத்து போலீசார் வீட்டை உடைத்து சோதனை நடத்தி பார்த்தனர். அங்கு ஒரு பெண் இரண்டு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், […]
மும்பையை போன்று தற்போது தமிழகத்திலும் விபச்சாரத்தை சட்டரீதியான தொழிலாக கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா? என்று சில வருடங்களுக்கு முன்னர் ஆய்வு செய்ய தொடங்கினார்கள். பின்பு அது கைவிடப்பட்டது. ஆனால் தற்சமயம் சென்னையில் சட்டவிரோதமாக விபச்சார தொழிலை நடத்தி வரும் ஒரு கும்பல் சட்ட விரோதமாக நடக்கும் தொழில் என்று கூட பாராமல் விளம்பரப் பலகை வைத்து அந்த தொழிலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையை அடுத்துள்ள கிண்டியில் தனியார் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லாமிங்டன் சாலையில் உள்ள வீட்டில் விபச்சார தொழில் நடைபெற்று வருகிறது. 20க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பெண்கள் அழைத்து வரப்படுவதாக சமூக குற்றப்பிரிவிலிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் பேரில், உண்மையைக் கண்டறிய ஒருவரை வாடிக்கையாளர்கள் போல அனுப்பி விபச்சாரம் […]
சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.முன்பெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பொது இடங்களில் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதும், பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் நடந்தேறி வந்தனர்.ஆனால் தற்சமயம் அதையும் தாண்டி ஒரு மிகக் கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையே பல மாதங்களாக யுத்தம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகள் இலங்கை நாட்டிற்கு வருவதாக அந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது செலவு செய்வதற்கும், சுற்றிப் பார்ப்பதற்காகவும் அல்ல. அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஓரளவு பணம் சம்பாதிப்பதற்காக வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். இதனை […]
புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் இருக்கும் சூரியகாந்தி நகரில் ஒரு வீட்டில் யாருக்கும் தெரியாமல் விபச்சாரம் நடைபெற்று வருவதாக புதுச்சேரி மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் முத்தியால்பேட்டையில் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முதலில் மறைமுகமாக இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து செல்வோரை கவனித்துள்ளனர். சில ஆண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வீட்டிற்குள் வந்து […]