10,11- ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும். இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர்‌ சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-2023-ம் ஆண்டில்‌ 10 மற்றும்‌ 11-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்‌ மே 19-ம்‌ தேதி பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்விவளாகத்தில்‌ அமைந்துள்ள புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ நூற்றாண்டு விழா கட்டடத்தின்‌ முதல்‌ தளத்தில்‌ வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌; 12-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள்‌ விடைத்தாள்‌ நகல்‌, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ மாணவர்கள்‌ தாங்கள்‌ படித்த பள்ளிகள்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய தேர்வு மையங்கள்‌ மூலமாகவும்‌ இன்று காலை 11 மணி முதல்‌ 13-ம்‌ தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌. தேர்வர்கள்‌ தங்களது விடைத்தாள்‌ நகல்‌ வேண்டுமா? அல்லது மதிப்பெண்‌ மறுகூட்டல்‌ செய்ய […]

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக இன்று வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு, இன்றுடன் நடைபெற்று முடிய உள்ளது. தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். விடைத்தாள் திருத்தும் மையமாக அமைக்கப்பட்டுள்ள […]

10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நடைபெறவுள்ள ஏப்ரல் 2023-ம் ஆண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள்‌ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள்‌ தங்களது USER ID மற்றும்‌ PASSWORD பயண்படுத்தி பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. மேலும்‌, ஏப்ரல்‌ 2023 பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில்‌ பள்ளி மாணவ, மாணவிகளின்‌ பெயர்‌, பிறந்த […]

தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. பிளஸ் ஒன் பொதுத் தேர்வுகள் புதன் கிழமை தொடங்கி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களில் பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 13,114 பேர் பிளஸ் 1 பொது தேர்வு எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப் […]

பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது என்று அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு வழங்கப்பட்ட உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், “தேர்வு மையத்தின் முக்கியப் பொறுப்பான முதன்மைக் கண்காணிப்பாளர் பணியில் தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களையோ அல்லது அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களையோ தேர்வு மைய முதன்மைக் […]

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், வரும் 28-ம் தேதி முதல் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், வரும் 28-ம் தேதி பிற்பகல் முதல் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். […]

சிறுபான்மையினர் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழிக்கு பதிலாக அவரவர் தாய்மொழிகளில் தேர்வெழுத தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் , அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் 17-ம் தேதி முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்கள் பள்ளியில் ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி […]

ஊரகப் பகுதிகளில் அதிக தேர்வு மையங்களை ஏற்படுத்த அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.. தமிழகத்தில் பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு மையங்களுக்காக அதிக நேரம் பயணம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.. எனவே தேர்வு மையங்களுக்குக்காக நீண்ட நேரம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், ஊரகப் பகுதிகளில் அதிக தேர்வு மையங்களை ஏற்படுத்த அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.. அதன்படி, ஒரு மாணவர் 10 அல்லது […]

பொதுத்தேர்வுக்கு நாளை முதல் ஜனவரி 7-ம் தேதி வரை இ-சேவை மையங்களின் மூலம் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 […]