ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 75-ஆவது சுதந்திர தின உரையில்‌ மக்களிடையே காணப்படும்‌ இரத்த சோகையை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம்‌ பொதுவிநியோக திட்டம்‌, குழந்தைகள்‌ வளர்ச்சி திட்டம்‌ மற்றும்‌ மதிய உணவு திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்‌ என அறிவித்தார்‌. தருமபுரி மாவட்டத்தில்‌ பொதுவிநியோக திட்டத்தின்‌ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்‌ […]

ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம்‌ / சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ முறைகேடாக கள்ளச்சந்தையில்‌ விற்று […]

நாட்டில் சுமார் 40,000 நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்ற சேவைகளை அளிப்பதன் மூலம் ரூ.50,000 வருவாய் ஈட்டி வருவதாக நியாயவிலைக் கடைகளின் மாற்றத்திற்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சஞ்ஜீவ் சோப்ரா தெரிவித்தார். மாநாட்டில் பேசிய அவர், பொது விநியோக சேவை நடவடிக்கைகளுக்கு அப்பால், மற்றப் பொருட்களை விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன் மூலம் துடிப்புமிக்க, நவீனமான, சாத்தியமிக்க நியாயவிலைக் கடைகளாக மாற்றுமாறு அவர் […]

தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின்‌ கீழ்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில்‌ ஒரு குடும்பத்துக்கு மாதம்‌ ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யும்‌ பொருட்டு தருமபுரி மாவட்டத்தின்‌ மாதாந்திர தேவை 440 மெட்ரிக்‌ டன்‌ எனவும்‌, இதற்காக ராகி சிறு தானியத்தை சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல்‌ செய்திட தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிப கழகத்திற்கு […]

பொது விநியோகத்திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை குடிமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி- 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத்‌ திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ சென்னையில்‌ உள்ள 19 மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகங்களில்‌ 11.02.2023 அன்று காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரை […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ வருகின்ற 11.02.2023 அன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான சிறப்பு குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும்‌ கிடைக்கும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள்‌ வாரியாக மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி- 2023 மாதம்‌ இரண்டாவது […]

ரேஷன் கடைகளில் மார்ச் 2024-க்குள் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மத்திய அரசு, பொது விநியோகத்திடம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 […]

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக 27-ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது 16-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தற்போது ரேஷன் கடைகளில் […]

ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின்‌ கீழ்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில்‌ ஒரு குடும்பத்துக்கு மாதம்‌ ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யப்படும்‌ என அரசால்‌ அனுமதி […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்கப் பணம் தமிழகத்தில் […]