நாட்டில் முதல் முறையாக மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதனால், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவு முன்கூட்டியே கிடைக்கும் என்று இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் (RGI) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக RGI மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் X தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். […]