ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு மாணாக்கர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் -ரூ.10,000/- உதவித் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த தமிழக அரசால் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சருடன் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதியக் கண்டுபிடிப்புகளைத் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் “ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் […]

மாணவர்கள் உதவித் தொகை பெற கட்டாயம் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2022-23 ஆம்‌ கல்வியாண்டில்‌ 9ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை கல்வி பயிலும்‌ ஆதிதிராவிடர்‌ / பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர்‌ மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணாக்கர்களின்‌ வங்கி கணக்கு எண்‌, ஆதாருடன்‌ இணைக்கப்படுவது கட்டாயமாகும்‌. […]

நாட்டுப்புறப்பாடல் கலைஞர்கள் உட்பட அனைத்து கலைஞர்களையும் பாதுகாக்க ‘கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை’ பெயரில் கலாச்சாரத் துறை அமைச்சகம் ஒரு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை திட்டம் 3 பிரிவுகளைக் கொண்டுள்ளது. பல்வேறு கலாச்சார துறைகளிலும், இளைய கலைஞர்களுக்கு உதவித்தொகை விருது, பல்வேறு கலாச்சாரத் துறைகளில், சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மூத்த மற்றும் இளையோர் கௌரவத்தொகை விருது, […]

இந்தியாவில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இடைநிற்றலை குறைப்பதற்காக மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் மூலம் பழங்குடியின மாணவர்களுக்காக 10-ம் வகுப்பு வரையிலான கல்வி உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொடக்க கல்வி முதல் இரண்டாம் நிலை கல்வி வரையிலான இடைநிற்றல் குறைந்துள்ளது. அம்மாணவர்கள் 9 மற்றும் 10-ம் […]

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. பாஜக, காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறது. இந்தநிலையில் ராகுல் […]

சிறுபான்மையினர் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அறிவிக்கப்பட்ட 6 சிறுபான்மையினர் சமுதாயங்களின் நலனுக்காக நாடு முழுவதும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களது சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திறன் மேம்பாட்டு அமைச்சகம், ஜவுளித்துறை அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் மூலம் சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் […]

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், […]

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01.01.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் […]

ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட விவரங்களை அறிய அரசின் ‘சம்பல்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. ‘சம்பல்’ (SAMBAL) மொபைல் செயலி, தேசிய தகவலியல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள், ஓய்வூதியம் […]

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ கல்வி உதவித்‌ தொகைக்கான இணையதளம்‌ கடந்த 30.01.2023 அன்று திறக்கப்பட்டு இது வரை சுமார்‌ 3 லட்சம்‌ மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. மேலும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இத்திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌, முதன்முறையாக e-kyc முறையில்‌ ஆதார்‌ எண்‌ மற்றும்‌ அதனுடன்‌ இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு அதார்‌விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு, இணையத்தில்‌ பெறப்பட்ட சாதிசான்று,வருமானச்சான்று, ஆதாருடன்‌ இணைக்கப்பட்ட சேமிப்புக்‌ கணக்கு எண்‌ ஆகிய அனைத்து […]