தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் பயனடையும் விதமாக, இலவச பஸ் பாஸ் வசதி ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தங்களுடைய பள்ளிகள் மூலமாக இந்த பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம். பின்னர் அது மூலம் கல்வி ஆண்டு முழுவதும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். அந்த விதத்தில், தமிழகத்தில் இந்த வருடம் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்ற நிலையில், பள்ளிகள் […]

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இன்று இந்த பயிற்சி தொடங்கி இருக்கிறது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரையில் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தலைமை திறன், பணியின் திறன் மேம்பாடு […]

தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அறிவியல் பாடம் தொடர்பாக ஒரு பயம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிவியல் பாடத்தின் புதிய வினாத்தாள் வடிவமைப்பு மாணவர்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. பொதுவாக […]

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவர் 2014-ல் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இவரது நியமனத்தை 2017ல் அங்கீகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. தனது நியமனத்தை 2014 முதல் அங்கீகரித்து சம்பள பாக்கி மற்றும் பணப்பலன்களை வழங்கக்கோரி ஜேசுபிரபா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கப்பட்டு 2014 […]

தமிழகத்தில் இருக்கின்ற பள்ளிகளில் தமிழகத்தின் தாய் மொழியாம் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் அடிக்கடி எழுந்த நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயமாக்கும் சட்டம் கடந்த 2015 ஆம் வருடம் அமலுக்கு வந்த நிலையிலும், 8ம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் மொழி கற்பிக்கப்படும் என்றும், நடப்பு கல்வி ஆண்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று […]

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக்கல்வி பட்டைய பயிற்சியின் சேர்க்கை பெற விருப்பம் கொள்ளும் மாணவ, மாணவிகள் ஜூன் மாதம் 5ம் தேதி முதல் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, எஸ்.சி.இ.ஆர்.டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிடம் 2023-24 […]

தமிழ்நாட்டில் கடந்த 15 ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஆரம்பித்த நிலையில், மே மாதம் 26 ஆம் தேதி வரையில், நடைபெற உள்ளது. ஏற்கனவே நடந்த 6ம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அது சென்ற 15ம் தேதி ஆரம்பமானது. தமிழ்நாட்டில் அரசு வருடம் தோறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான கலந்தாய்வு மே மாதம் […]

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 அடிப்படையில், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கின்ற குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் வருடம் அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 8000 திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் தற்சமயம் […]

சமீபத்தில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி 8,36,593 மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 97 சதவீதம் என்று கூறப்படுகிறது. அதேபோல வழங்கும் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 5.36 சதவீதமாக […]

கோடை வெயிலின் காரணமாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.. நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடுமையான வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.. இந்த சூழலில் ஏப்ரல், மாதங்கள் இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வெயிலின் காரணமாக தற்போது 6 முதல் […]