இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 1முதல் 5 ஆம் வகுப்பு வரை 2023-2024 ஆம் ஆண்டு மாணக்கர்கள் சேர்க்கைநடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியானது தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசுமேல்நிலைபள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியானது 1 முதல் 5ம் வகுப்பு வரை […]
school student
ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள் ஆதாருடன் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க வேண்டும். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2022-2023 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு, இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய […]
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி 6 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும். அதன்படி ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து, மாநகராட்சி 7 ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், கணக்கெடுப்பு களப்பணி ஏப்ரல் 2023 முதல் இரண்டு வாரங்களிலும் மற்றும் மே 2023 இறுதி வாரத்திலும் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி சார்ந்த மாணவனை அங்குள்ள பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரம்பால் தாக்கியதில் படுகாயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான் ஹரிராம்.. இவரது தந்தையின் பெயர் […]
இந்தியாவில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இடைநிற்றலை குறைப்பதற்காக மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் மூலம் பழங்குடியின மாணவர்களுக்காக 10-ம் வகுப்பு வரையிலான கல்வி உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொடக்க கல்வி முதல் இரண்டாம் நிலை கல்வி வரையிலான இடைநிற்றல் குறைந்துள்ளது. அம்மாணவர்கள் 9 மற்றும் 10-ம் […]
பாலசமுத்திரம் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சார்ந்த கொத்தனார் வேலை செய்யும் கோபி என்பவரது மகன் மௌனீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் இன்று மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது சிறு […]
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 249 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் மூலமாக இரும்பு சத்து மற்றும் போலிக் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சென்ற 6ம் தேதி குழந்தைகளிடம் சத்து மாத்திரை அதிகளவில் கிடைத்திருக்கிறது. இதை வைத்து யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரையை சாப்பிடுவது என்று […]
11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செய்முறைத்தேர்வுகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலான நாட்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி பள்ளி […]
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், இன்று மாலை வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் இன்று மாலை வரை, மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் சிறப்புக் கட்டணம் […]
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. அது ஒரு புறம் வருத்தம் அளித்தாலும், இது போன்ற தவறுகளில் ஈடுபடுவார்கள் தங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவறு செய்தால் அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் விவரம் அறிந்த பெண்களாக இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் எதுவுமே தெரியாத பள்ளிக்கு செல்லும் மாணவிகளை சீரழிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் காட்டன் பஜார் தெருவை […]