வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வசதியாக வாழ வேண்டும், இல்லை என்றாலும் ஒரு சுற்றுலா பயணியாகவேனும் உலகம் சுற்ற வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றும் ஒரு அபூர்வமான சிவன் கோவில், நம்முடைய தமிழ்நாட்டிலேயே உள்ளது என்பதை தெரிந்து ஆச்சரியப்படாதீர்கள். சென்னையிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்த படூர் என்ற ஊரில்தான் இந்த மணிகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. […]