இந்தோனேசியா 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் பல பிரபலமான சமூக ஊடக தளங்களில் கணக்கு வைத்திருக்க முடியாத வகையில் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறையை அந்த நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகாரங்களுக்கான அமைச்சர் மியூட்டியா ஹபித் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டு அமல்படுத்தினார். அமைச்சர் இதுகுறித்து பேசிய போது “ இளம் வயது பயனாளர்களை டிஜிட்டல் தளங்களில் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. […]

