சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் இனி QR கோடு ஸ்கேன் செய்து சொத்து வரி செலுத்தலாம். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாக QR கோடு ஸ்கேன், விபிஎன் முகவரி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், காசோலை மற்றும் வரைவோலை வாயிலாக தங்களது சொத்துவரியினை எளிதாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை […]

சொத்து வைத்திருக்கும் அதன் உரிமையாளர்கள் அனைவரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள்‌ தங்களது 2023-24ஆம்‌ ஆண்டின்‌ முதல்‌ அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல்‌ 30-ம்‌ தேதிக்குள்‌ செலுத்தும்‌ சொத்து உரிமையாளர்கள்‌ ரூ.5,000 பெற ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர்‌ ஆகிறார்கள்‌. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள்‌ தங்களது சொத்து […]

நேர்முக வரிகள் வசூலித்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை மத்திய நேர்முக வரிகள் வாரியம் அவ்வப்போது பொது வெளியில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2013-14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 121.18 சதவீதம் அதிகரித்து 2021-22 நிதியாண்டில் ரூ.14,12,422 கோடியாக இருந்தது. 2013 -14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 160.17 சதவீதம் அதிகரித்து 2022-23 […]

வாகன ஓட்டிகள் அனைவரும் இன்று மாலைக்குள் சாலை வரியை செலுத்த வேண்டும் என தருமபுரி போக்குவரத்து துறை அலுவலர் தெரிவித்துள்ளார். 2023-2024 -ம்‌ நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான சாலை வரி வசூல்‌ சிறப்பு முகாம் மூலம் இன்று மாலை வரை வட்டார போக்குவரத்து அலுவலகம்‌, தருமபுரி மற்றும்‌ இவ்வலுவலக கட்டுப்பாட்டில்‌ இயங்கும்‌ மோட்டார்‌ வாகன ஆய்வாளர்‌ அலுவலகங்கள்‌ அரூர்‌, பாலக்கோடு ஆகிய அலுவலகங்களில்‌ நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்‌ […]

2022-23-ம் நிதியாண்டுக்கான (தற்காலிக) நிகர நேரடி வரி வசூல் ரூ.16.61 லட்சம் கோடியாக உள்ளது. 2021-22 நிதியாண்டில் ரூ.14.12 லட்சம் கோடியாக இருந்த நிலையில், வரிவசூலிப்பு 2022-23ம் நிதியாண்டில் 17.63 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கான நேரடி வரி வருவாய் ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்தது. பின்னர் அந்த தொகை ரூ.16.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டின் […]

வரி செலுத்துவோருக்கான ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கான ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலியை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. இதில் வரி செலுத்துவோர் AIS for Taxpayer என்ற செயலியை கூகுல் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோர்களில் இலவசமாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். வரி பிடித்தம், வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரித்தொகை, வருமான வரி திரும்ப பெறுதல் மற்றும் இதர தகவல்களை […]

சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டும். இது குறித்து தருமபுரி வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்‌ தனது செய்தி குறிப்பில்; நடப்பு காலாண்டு 31.03.2023 -க்கு சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டிய கடைசி நாள்‌ வருகின்ற 30.03.2023 ஆகும்‌. இது தொடர்பாக அனைத்து வாகன […]

2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களை முன்கூட்டியே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கைகள் 2023 பிப்ரவரி 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டது. இவை 2023 ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வரும். வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும் வகையிலும் எளிதாக கணக்கு தாக்கல் செய்வதை மேம்படுத்தவும், புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்கள் எதுவும் […]

2022-2023ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத்‌ தொடரின்போது ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள்‌ செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்‌ வரி, குடிநீர்க்‌ கட்டணம்‌, விளம்பர வரி, உரிமக்கட்டணம்‌ போன்றவற்றை இணைய வழியின்‌ மூலம்‌ செலுத்தும்‌ வசதி உருவாக்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக, தமிழ்நாட்டில்‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்‌ அனைத்து வரிகள்‌ மற்றும்‌ கட்டணங்களை இணையதளத்தின்‌ மூலமாக வீட்டு வரி […]

வரும் மத்திய பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் என்று இந்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், 2023ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூலுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட 25-30% அதிகமாக இருக்கும் என்றார். அதேபோல நீண்ட கால மூலதன வரிக்கான வைத்திருக்கும் கடன் பத்திரங்களுக்கு […]