மதுரை மாவட்ட பகுதியில் உள்ள திருமங்கலம் விமான நிலையத்திற்கு அருகே தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புற முட்புதரில் இருசக்கர வாகனம் 2 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருக்கிறது என அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முட்புதருக்குள் ஆய்வு செய்தபோது உடல் ஒன்று அழுகிய நிலையில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர். […]