திருநெல்வேலி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக மாமனாரே மருமகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே உள்ள இடப்பேரி பகுதியைச் சார்ந்தவர் தங்கராஜ் வயது 56. இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகன் மருமகள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் வயது 33 இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் முத்துமாரி. தமிழ்செல்வன் மற்றும் […]

நெல்லையருகே வீட்டிற்குள் புகுந்து ரத்தத்தை காட்டி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் டேனியல் சேகர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சகிலா அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதால் தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார் […]

சாத்தான்குளம் பகுதியில் உள்ள கிரசர் ஆலையில் நன்கொடை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவைச் சார்ந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிரசர் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நவீன் குமார் என்பவர் மேலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சாத்தான்குளம் மாவட்டம் இடைச்சிவிளை சார்ந்த பாரதிய […]

நெல்லை டவுன் பகுதியைச் சார்ந்த 13 வயது மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை டவுன் தைக்கா தெருவை சார்ந்தவர் மைக்கேல் ராஜ் இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண் என்ற மகனும் ஒரு மகளும் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல் ராஜ் உயிரிழந்து விட்ட நிலையில் அவரது மனைவி மேரி தனியார் நிறுவனம் […]

திருநெல்வேலியில் உள்ள பழைய பேட்டையில் இரண்டாவது திருமணமாகியும் முதல் மனைவியை நினைத்து ஏங்கி வந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி பழைய பேட்டை சர்தார் புறம் நடுத்தெருவை சார்ந்தவர் நைனார் இவருக்கு வயது 40. இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் 17 வயதில் சரண்யா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நயினார் மற்றும் அவரது […]

தனது கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க வந்த திருடர்களிடம் “ஏலே, அது பித்தளைச் செயின்” என ஒரு மூதாட்டி கூறியதால் அந்தத் திருடர்கள் செயினை போட்டுவிட்டு விரக்தியில் சென்றுள்ளனர். இந்த சுவாரசியமான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று இருக்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரம் பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி கணபதி. இவர் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். அப்போது […]

நெல்லை மாவட்டம் கயத்தாறு போலீசார்  மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸை தனியார் காரில் விரட்டி பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சார்ந்தவர் செய்யது அலி பாத்திமா இவர் தனது தாயாருடன்  கயத்தாறு பகுதியில் ஒரு துக்க வீட்டிற்காக  திருநெல்வேலி இருந்து மதுரை சென்ற  அரசு பேருந்தில் சென்றிருக்கிறார். கயத்தாறு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இவர்  தனது மணி பர்ஸை தேடிய […]

திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நண்பனே மனைவியின் கள்ளக்காதலன் ஆனதால் ஆத்திரமடைந்த நபர் நண்பனை அறிவாளால் வெட்டிவிட்டு  தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் ஆறுமுகத் தோட்டம் பகுதியைச் சார்ந்தவர் செந்தில் நாராயணன் இவரது வயது 42. இவரது நண்பர்  கிருபாகரன். நீண்ட காலமாக இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்ததால் செந்தில் நாராயணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்  […]

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில்  பிளஸ் டூ மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேரை  காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர் . திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி.  இங்கு இயங்கி வரும் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கே பெரும்பாலான இஸ்லாமிய மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் […]