திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20ம் தேடி வயிற்று வலி உண்டானது. இதனை தொடர்ந்து திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அவரது பிரேத பரிசோதனையில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் தான் சிறுமி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் பெற்றோரிடம் வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி கர்ப்பமாக […]

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் புதூர் பாரதி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை இவர் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் நாள்தோறும் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் இருக்கின்ற முதலியார் பாளையம் சிட்கோ பகுதியில் இருக்கின்ற பனியன் நிறுவனம் ஒன்றுக்கு பேருந்தில் வேலைக்காக சென்று வருவது இவருடைய வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இன்று காலை வழக்கம் போல அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து அரசு பேருந்து […]

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2022 – 2023ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மோட்டார் குதிரை திறனுக்கேற்ப 90 % அல்லது அதிகபட்சமாக 3.60 லட்சம் ரூபாய் வரை மானியத்தில் 900 ஆதிதிராவிடர் மற்றும் 100 பழங்குடியினர் என மொத்தம் 1,000 […]

திருப்பூரில் கடைகளில் திருடியது எவன் பார்த்த வேலைடா இது ….. திருடிய கடையில் சாக்லேட் சாப்பிட்டுவிட்டு கடை வாசலில் மலம் கழித்த திருடன் … திருப்பூரில் அதிர்ச்சி!மட்டுமல்லாமல் திருடிய கடை வாசலிலேயே மலம் கழித்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூரின் கேவிஆர் நகர் பகுதியில் திருமலை காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஜவுளி கடைகள் மளிகை கடைகள் என […]

̓தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஹாஸ்பிடல் குவாலிட்டி மேனேஜர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08.03.2023 தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முதுகலையில் அறிவியல் பிரிவில் […]

சென்னையில் செம்பரம்பாக்கம், பொன்னேரி பகுதிகளில் இன்று மின்தடை என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் மின்தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக செம்பரம்பாக்கம், பொன்னேரி பகுதிகளில் கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 […]

திருப்பூர் அருகே பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட தகராறில் மேஸ்திரியின் மர்ம உறுப்பை அறுத்து எறிந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர் அருண் வயது 35 இவர் திருப்பூரில் வேலம்பாளையம் பகுதியில் கட்டிட மேஸ்திரியாக கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது சொந்த ஊர் செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்திருக்கிறார் அருண். அப்போது பக்கத்தில் இருந்த சக […]

திருப்பூர் நகரில் ஆயுதப் படை காவலராக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம் காமாட்சிபுரம் அழகாபுரியைச் சார்ந்தவர் ஹரி கிருஷ்ணன் வயது 30. இவர் 2017 ஆம் ஆண்டு முதல் ஆயுதப் படை காவலராக பணியாற்றி  வந்தார். இவரது மனைவி கிருஷ்ண பிரியா  இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை.  இவர் தனது குடும்பத்துடன்  திருப்பூர் சிவசக்தி நகரில் வசித்து வந்தார். ஆயுதப் […]

திருப்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில்  குடிமகன் ஒருவர் ரசீது கேட்டு ரகளையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் வைரலாகியுள்ளது. அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு மதுவை விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி அந்த நபர் தனக்கு ரசீது வழங்காவிட்டால் டாஸ்மாக் மேலாளரை கடையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டேன் என மிரட்டும் தோனியில் பேசியிருக்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலம்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் இன்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவக்கொழுந்து மேற்பார்வையில் […]

சொந்த தங்கையே பூர்வீக சொத்திற்காக அண்ணனை சித்திரவதை செய்த சம்பவம் கோயம்புத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள தெக்கலூரை சார்ந்தவர் தங்கதுரை. இவர் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது தங்கை அம்பிகா. அவர் தனது கணவருடன் சேடப்பாளையத்தில் வசித்து வருகிறார். பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சனை இவர்களுக்குள் நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் தங்கதுரை இது சம்பந்தமாக பல்லடம் காவல் நிலையத்தில் […]