வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையை எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் […]
Tn government money
இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் குறித்த இணைய வழிகருத்தரங்கம் பயிற்சியினை வரும் 03.06.2023ம் தேதி (காலை 10.00 முதல் மாலை 5.00 […]
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,சென்னை, மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இணையவழி கருத்தரங்கம் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 5.30 மணி வரை வழங்க உள்ளது. இப்பயிற்சியில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் மின்னணு முறையின் நுட்பங்கள், இணையதளத்தை உருவாக்குதல், டொமைன் பெயர் உருவாக்குதல் & ஹோஸ்டிங், இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் நன்மைகளை விளக்குதல், உள்ளிட்டவை […]
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார சமேம்பாட்டுக்கழகத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ஆம் நிதியாண்டிற்குரிய கடன் திட்டங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக்கடன், பெண்களுக்கான புதிய […]
ரூ.1.76 கோடி செலவில் மாற்று திறன் குழந்தைகளை பராமரிக்க மாதம் தோறும் ரூ.4,500 மதிப்பூதியம் வழங்கப்படும். சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன்; நவீன கருவி வாசிக்கும் திட்டம் ரூ.1.4 கோடி செலவில் உயர்கல்வி பயிலும் பார்வை குறைவான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூபாய் 14,000 உதவித்தொகை வழங்கப்படும். […]
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை நலவாரியத்தில் இணைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் […]
தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ஐ.பெரியசாமி ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66 ஆயிரத்து 13 தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3600-லிருந்து ரூ.5000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நகர்ப்புறத்தை ஒட்டி உள்ள ஊராட்சிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் கழிவு வேளாண்மை வசதிகளை அருகில் உள்ள நகர்ப்புறங்களுடன் […]
18 வயது நிறைவடையாத குழந்தை/ வளரிளம் பருவத்தினரை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவோருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம் 1986-ன் கீழ் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 6 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-09ம் தேதியன்று கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அணுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொத்தடிமைத் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டெடுத்து […]
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.45.00 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஆவின் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுகடை அமைத்து ஆவின் நிறுவனத்திடம் […]
வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை பேசிய அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் வடகிழக்குப் பருமவழை குறைந்துள்ளது. மூன்று நாளைக்குப் பிறகு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பாதிப்பால் மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இதேபோல் கால்நடை உயிரிழப்பில், பசு, எருமை ஒன்றிற்கு ரூ. 30,000, செம்மறி ஆடு, ஆடு, பன்றி […]