fbpx

தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாக 1 – 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு …

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளன. இந்த தேர்வினை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என …

தமிழக அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று (மார்ச் 01 2025) முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி முடித்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே, தனியார் பள்ளிகளின் சேர்க்கைக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் மாணவர் …

2024-25ஆம் கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கியது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, 12ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 9ஆம் தேதியும், 10ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 10ஆம் தேதியும் தொடங்கின. இதையடுத்து எஞ்சிய வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது. இடையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வடக்கு உள் மாவட்டங்களில் …

10 ஆயிரம் போலி ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்தில் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த கே.பாலாஜி தனக்கு …

3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2024 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட 3000 ஆசிரியரின்றி உபரி …

தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்குவதாகவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம் என்றும் முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இந்தியாவின் பல்வேறு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுபொ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு …

கல்வி வளர்ச்சி நாளான இன்று (ஜூலை 15) தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இத் திட்டத்தை தமிழ்நாடு அரசின் …

பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலி முடங்கியதால் 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டத்தில் பாடத்திட்டம் வடிவமைக்கப்ட்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த மாணவர்களுக்கு TNSED என்ற அலைபேசி செயலி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த …

நம்ம ஸ்கூல் பௌண்டேஷன் மூலமாகவே நன்கொடைகளைப் பெற வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; பல்வேறு மாவட்டங்களில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது, இலவசமாக நூல்கள், இதழ்கள் வழங்குவது போன்ற பணிகளை …