டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 காலியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்படுவது போதுமானதல்ல. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் […]

ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழி தேர்வு 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 13.05.2023 அன்று (முற்பகல் மற்றும் பிற்பகல் ) மற்றும் 14.05.2023 அன்று (முற்பகல்) […]

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மே 8 முதல் 16 வரை தங்கள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். முதன்மைத் தேர்வுக்கான தேர்வுகட்டணம் ரூ.200-ஐ மே 15 அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய […]

தமிழ்நாடு அரசின்‌ பல்வேறு துறைகளில்‌ உள்ள காலி பணியிடங்களை நிரப்பும்‌ பணியை, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மேற்கொண்டு வருகிறது. துணை ஆட்சியர்‌, காவல்‌ துணைகண்காணிப்பாளர்‌ உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான குரூப்‌ 1முதல்நிலைத்‌ தேர்வு, கடந்த 2022ஆம்‌ஆண்டு நவம்பர்‌ 19-ம்‌ தேதி நடைபெற்றது. இதனை 3 லட்சத்திற்கும்‌ அதிகமானோர்‌ எழுதினர்‌. இந்தநிலையில்‌, நேற்று குரூப்‌ 1முதல் நிலைத்‌ தேர்வு முடிவுகள்‌ வெளியாகி உள்ளன. இதனை தேர்வர்கள்‌ www.tnpsc.gov.in என்ற […]

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு கம்ப்யூட்டர் மூலம் 20-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது. […]

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜனவரி 2024 பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு வருகிற ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வுகள் சென்னை நகரிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என […]

TNPSC போட்டி தேர்வு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிப்பு இது குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; குரூப்- 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கையை 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டுளளது. இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆக அதிகரிக்கப்பட்டுளளது. தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் […]

குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசுத் துறைகளில், குரூப் 2 மற்றும் 2A பணிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 25-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பிரதானத் தேர்வில், பல முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தேர்வு எழுதிய […]

குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”குரூப் 2 பணிக்கான முதன்மை எழுத்து தேர்வு 25-ம் தேதி காலை மற்றும் மாலை நேரங்களில் 20 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும் விடைத்தாள்களில் உள்ள […]

நோக்கம்’ என்ற செயலியின் மூலம் TNPSC,TNUSRB, SSC,IBPS, UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின்‌ முதன்மைப்‌ பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப்‌பணியாளர்‌ கல்லூரி அரசுத்‌ துறைகளிலும்‌, பொதுத்‌ துறை நிறுவணங்களிலும்‌ பணிபுரிபவர்களுக்குப்‌ பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின்‌ தன்மையை விரிவுபடுத்தவும்‌, தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் அது சென்றடைய வேண்டும்‌ என்ற எண்ணத்தில் AIM TN என்றழைக்கப்படும்‌ […]