ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா இன்று மீண்டும் ஒருமுறை ஆதரித்து, “நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் ” இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலையான முன்னுரிமையாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் […]