வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் சமர்ப்பிக்கப்படும் இந்திய குடிமக்களின் ஆவணங்களை சரிபார்த்து சான்றளிப்பதற்காக தேசிய தகவல் மையத்துடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் இ-சனத் என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை அலுவலகத் தலைவர்; இந்தத்தளத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி விளக்கினார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு இணையவழியில், முகமற்ற, பணமில்லா மற்றும் காகிதமில்லா ஆவண […]