நேபளத்தில் தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றில் இன்று அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பேருந்து போகாராவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. பெனிகாட் ரோராங் கிராமப்புற நகராட்சி-5 இல் உள்ள பைசேபதி அருகே உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து திடீரென சாலையை […]

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணிபுரியும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.. இவர்களில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர். பணி நீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்களை சமூக ஊடகங்களில் உணர்ச்சிப்பூர்வமான செய்திகளைப் பகிர்ந்தனர்.. உலகின் மிகவும் செல்வாக்குமிக்க செய்தி நிறுவனங்களில் ஒன்றுக்கு இது ஒரு பேரழிவு தருணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மூத்த சர்வதேச […]

அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில், மற்றொரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சுனாம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பங்கதோஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஜாய் மகாபத்ரோ என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜாய் ஒரு உள்ளூர் கடைக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் ஒரு உள்ளூர்வாசியால் தாக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினர். ஜாய் சில்ஹெட் […]

அமெரிக்காவின் மிக உயர்ந்த ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் “அழிவு நாள் விமானம்” (Doomsday Plane) எனப்படும் விமானம், இந்த வாரம் எதிர்பாராத விதமாக பொதுமக்கள் முன் தோன்றியது. இது, அணு யுத்தம் போன்ற பேரழிவுகளையும் தாங்கும் வகையில், பனிப்போர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட வான்வழி கட்டுப்பாட்டு மையமாகும். இந்த விமானம் Boeing E-4B Nightwatch என அழைக்கப்படுகிறது. அது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் (LAX) தரையிறங்கியது. இது, அதன் 51 […]

சுவிடர்லாந்தில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற பனிச்சறுக்கு ஓய்வு விடுதி நகரத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு பயங்கர வெடிப்பில் பலர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு காரணமாக தீ விபத்தும் ஏற்பட்டது.. ஒரு ஆடம்பரமான ஆல்பைன் பனிச்சறுக்கு ஓய்வு விடுதிக்குள் இருந்த ஒரு பாரில் நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரான்ஸ்-மொன்டானா சுற்றுலாப் பயணிகளிடையே, குறிப்பாக பிரிட்டிஷ் நாட்டினரிடையே மிகவும் பிரபலமானது. இது சுவிட்சர்லாந்தின் […]

இங்கிலாந்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர், தான் 11 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக இறந்ததாகவும் அந்த நேரத்தில் சொர்க்கத்தையும் நரகத்தையும் அனுபவித்ததாகவும் கூறி, மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சார்லட் ஹோம்ஸ் என்ற அந்த பெண், இது ஒரு சாதாரண இதய பரிசோதனையாகவே தொடங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் பரிசோதனையின் போது, அவரது இரத்த அழுத்தம் திடீரென 234/134 என்ற உயிருக்கு ஆபத்தான அளவிற்கு உயர்ந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். […]

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், தனது துணைவி மற்றும் Neuralink நிர்வாகி ஷிவோன் சிலிஸ்ள் பாதி இந்தியர் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்குப் பிறந்த மகன்களில் ஒருவரின் இடைப்பெயர் ‘சேகர்’ (Sekhar) என்று வைத்திருப்பதாகவும் கூறினார். இந்த பெயர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் பெயரிடம் இருந்து எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த தகவலை அவர் […]