ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாது என்ற தகவல் போலியானது என PIB விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக மாணவர்கள் விளையாட்டாக ரூபாய் நோட்டுகளில் தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பெயர்களையோ அல்லது கையொப்பம் விடுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுபோன்ற நோட்டுக்களை பார்த்தால் பலர் கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இந்த நிலையில் தான் ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. […]