சிறுமியை பெங்களூருக்கு அழைத்துச் சென்று ரூம் போட்டு..!! நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்..!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமி திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1ஆம் தேதி அன்று வழக்கம் போல் வேலைக்குச் சென்ற சிறுமி இரவில் வீடு திரும்பவில்லை. இதனால், சிறுமியின் தாய் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு மகளை பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால், மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் பெங்களூருவில் சிறுமியை மீட்டனர். அவருடன் இருந்த 3 பேரையும் கைது செய்து மணப்பாறை அழைத்து வந்தனர்.


அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூரைச் சேர்ந்த முபாரக் அலி என்கிற 32 வயது வாலிபர், சிறுமியை காதலிப்பதாக கூறி வந்திருக்கிறார். நேரில் பார்க்க வேண்டும் என்று கடந்த 1ஆம் தேதி மணப்பாறைக்கு சென்றிருக்கிறார். அப்போது சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறி பெங்களூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பெங்களூரு அழைத்துச் சென்ற முபாரக் அலி அந்த சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அங்கிருந்து வேலூரில் இருந்த நண்பர்கள் ரியாஸ் என்கிற 32 வயது வாலிபர், சதாம் உசேன் என்கிற 28 வயது வாலிபர் ஆகியோருக்கும் போன் செய்து வரவழைத்து அவர்களுக்கும் சிறுமியை விருந்தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ரியாஸ், முபாரக் அலி, சதாம் உசேன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நீதிபதியின் உத்தரவை அடுத்து அந்த சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

CHELLA

Next Post

குடிபோதையில் சக நண்பனை அடித்துக் கொன்ற கும்பல்..!! ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிவிட்டு ஓட்டம்..!!

Mon May 8 , 2023
சென்னை பழைய மகாபலிபுர சாலை, காரப்பாக்கம் இந்திரா நகர் பகுதியில் நேற்றிரவு நண்பர்கள் 6 பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை மற்றவர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவத்தில் அந்த ஒரு நபரை, அவரது பின் தலையில் பலமாக மற்றவர்கள் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுய நினைவின்றி மயங்கியுள்ளார். இதைக்கண்ட அந்த 5 பேரும், ஆம்புலன்சிற்கு […]
murder with frnds

You May Like