புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமி திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1ஆம் தேதி அன்று வழக்கம் போல் வேலைக்குச் சென்ற சிறுமி இரவில் வீடு திரும்பவில்லை. இதனால், சிறுமியின் தாய் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு மகளை பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால், மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் பெங்களூருவில் சிறுமியை மீட்டனர். அவருடன் இருந்த 3 பேரையும் கைது செய்து மணப்பாறை அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூரைச் சேர்ந்த முபாரக் அலி என்கிற 32 வயது வாலிபர், சிறுமியை காதலிப்பதாக கூறி வந்திருக்கிறார். நேரில் பார்க்க வேண்டும் என்று கடந்த 1ஆம் தேதி மணப்பாறைக்கு சென்றிருக்கிறார். அப்போது சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறி பெங்களூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பெங்களூரு அழைத்துச் சென்ற முபாரக் அலி அந்த சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அங்கிருந்து வேலூரில் இருந்த நண்பர்கள் ரியாஸ் என்கிற 32 வயது வாலிபர், சதாம் உசேன் என்கிற 28 வயது வாலிபர் ஆகியோருக்கும் போன் செய்து வரவழைத்து அவர்களுக்கும் சிறுமியை விருந்தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் ரியாஸ், முபாரக் அலி, சதாம் உசேன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நீதிபதியின் உத்தரவை அடுத்து அந்த சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.