தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

9720893 chennaihighcourt25020002

சிறுபான்மை நிறுவனத்தில் உதவி ஆசிரியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு செய்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது..

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் உருது ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தது.. இந்த பணியிடத்திற்கு ஹாஜிரா என்பவர் 2022-ம் ஆண்டு நியமிக்கப்பட்டது. இந்த நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் அரசு விண்ணப்பித்திருந்தார்.


ஆனால் உருது ஆசிரியர் ஹாஜிரா என்ற ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாததால் ஒப்புதல் வழங்க மறுத்து 2023-ம் ஆண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்தாது என்று கூறி ஹாஜிராவின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் சுரேந்தர் அமர்வு, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்தாது என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்..

தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த அபராத தொகையை 4 வாரங்களில் பள்ளிக்கு வழங்க வேண்டும் என்றும் அரசு நீதிபதிகள் அறிவுறுத்தினர்..

Read More : “தமிழன் நாகரிகம் என்று சொல்ல உனக்கு ஏன் வலிக்கிறது? கொலைவெறி வந்துடும்..” கொந்தளித்த சீமான்..

English Summary

The Madras High Court has imposed a fine of Rs. 1 lakh on the Tamil Nadu government, which filed an appeal against the appointment of an assistant teacher in a minority institution.

RUPA

Next Post

ISIS-ன் இந்திய தலைவர் காலமானார்.. மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழப்பு..

Sat Jun 28 , 2025
ISIS's Indian leader Saqib Nachan died in a Delhi hospital due to a brain hemorrhage.
The nearly 12 hour long search operation on Monday 1751110434074 1751110446019 1

You May Like