தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டம்!… மாற்றியமைக்கப்பட்ட உணவுப் பட்டியல் இதோ!

பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட உணவுப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஏற்கனவே பரிமாறப்பட வேண்டிய உணவு வகைகள் குறித்து அறிவிக்கப்பட்டதன் படி உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் உப்புமா வகைகள் வழங்க வேண்டும். செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள் வழங்க வேண்டும். புதன்கிழமை காய்கறி சாம்பாறுடன் ரவா பொங்கல் அல்லது வெண்பொங்கல் வழங்க வேண்டும். அதேபோல் வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமா வகைகளையும், வெள்ளிக்கிழமை கிச்சிடி வகைகளையும் வழங்க வேண்டும் என அரசு முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் காலை உணவு திட்டத்தில் உள்ளூரில் விளையும் காய்கறிகளையும், சிறு தானியங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

பராக் ஒபாமா ஆட்சியின்போது 6 நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன!... நிர்மலா சீதாராமன் சாடல்!

Mon Jun 26 , 2023
இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குறித்த கருத்துக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பின்போது, ​​இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதிலுக்கு ஆதரவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். தேர்தல் தோல்விகளை எதிர்கொண்டுவரும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஆதாரம் இல்லாமல் பேசிவருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்திய முஸ்லிம்கள் […]
ஜிஎஸ்டி கவுன்சில் மீது பழி சுமத்திவிட்டு நீங்கள்தான் அதிக விலைக்கு விற்கிறீர்கள்..! - நிர்மலா சீதாராமன் காட்டம்

You May Like