தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் 1,588 பேருக்கு பயிற்சி.. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி..! வாய்ப்பை தவறவிடாதீர்கள்…

TN Bus 2025

பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) 2025ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,588 காலியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.


எந்த மண்டலங்களில் வாய்ப்பு?

இந்தப் பயிற்சி விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, திருநெல்வேலி, சென்னை MTC மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) ஆகிய 7 மண்டலங்களில் வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மண்டலத்தில் 230, கும்பகோணத்தில் 508, சேலத்தில் 92, மதுரையில் 108, திருநெல்வேலியில் 181, சென்னை MTCயில் 379 மற்றும் SETCயில் 90 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பணியிட விவரம்:

* விழுப்புரம் மண்டலத்தில் பொறியியல் பட்டப்படிப்பிற்குத் 100, பொறியியல் டிப்ளமோக்கு 40 மற்றும் இதர பட்டப்படிப்புக்காக 90 இடங்கள் உள்ளன.

* கும்பகோணம் மண்டலத்தில் 72 பொறியியல் பட்டப்படிப்பு, 136 டிப்ளமோ மற்றும் 300 இதர பட்டப்படிப்பு இடங்கள் வழங்கப்படுகின்றன.

* சேலம் மண்டலத்தில் 47 பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் 45 டிப்ளமோ இடங்கள் உள்ளன.

* மதுரை மண்டலத்தில் 20 பொறியியல் பட்டப்படிப்பு, 51 டிப்ளமோ மற்றும் 37 இதர பட்டப்படிப்பு இடங்கள், திருநெல்வேலி மண்டலத்தில் 66 பொறியியல் பட்டப்படிப்பு, 22 டிப்ளமோ மற்றும் 93 இதர பட்டப்படிப்பு இடங்கள் வழங்கப்படுகின்றன.

* சென்னை MTC மண்டலத்தில் 123 பொறியியல் பட்டப்படிப்பு, 237 டிப்ளமோ மற்றும் 19 இதர பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. தமிழ்நாடு SETC மண்டலத்தில் 30–30 இடங்கள் பொறியியல் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் இதர பட்டப்படிப்புகளுக்காக ஒவ்வொன்றாக வழங்கப்படுகின்றன.

* மொத்தமாக, 458 பொறியியல் பட்டப்படிப்பு, 561 பொறியியல் டிப்ளமோ மற்றும் 569 இதர பட்டப்படிப்பு இடங்கள் பயிற்சிக்காக திறந்துள்ளன.

கல்வித்தகுதி:

* மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பொறியியல் பட்டப்படிப்பு / டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

* பிஏ, பிஎஸ், பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட கலை, அறிவியல், வணிகத் துறைகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

* 2021 முதல் 2025 வரை தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள்.

உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு வருடம் தொழிற்பயிற்சி வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9,000, டிப்ளமோ தகுதிவாய்ந்தவர்களுக்கு ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும். எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் இல்லை. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு திருச்சி மண்டல அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமான மண்டலத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 18ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அக்டோபர் 29ஆம் தேதி வெளியிடப்படும். நவம்பர் இரண்டாம் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

Read more: ஆபாச படங்கள் பார்ப்பது புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கத்தை விட மோசமானது..! – மருத்துவர் வார்னிங்..

English Summary

Tamil Nadu State Transport Corporation (TNSTC) has announced an apprenticeship opportunity for the year 2025.

Next Post

Breaking : ஒரே நாளில் ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.97,000ஐ தாண்டியது..! நகைப்பிரியர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி..!

Fri Oct 17 , 2025
Gold prices in Chennai rose by Rs. 2,400 per sovereign today and are being sold at Rs. 97,600.
jewel new

You May Like