கன்னியாகுமரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் கொல்லம்விளையில் நடந்த சமயவகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
வித்யா ஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜீ மகராஜ் வழங்கினார் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்கி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.
’’தமிழகத்தில் இந்துதர்மத்தை பற்றி பேசுவது , ஆன்மீகத்தை பற்றி பேசுவது தவறான நிகழ்வு போல , மாயத்தோற்றம் உள்ளது. இந்த மாயத்தோற்றம் நிச்சயம் அகற்றப்பட வேண்டும். குமரியில் நம்பரத்தை காட்டிக்கொண்டிருக்கின்றோம்.இதே பலம் மற்ற இடங்களில் வர வேண்டும். ஆன்மீகம்தான் நம் அடிப்படை ஆனால் , காவியின் பலம் கறுப்பால் மறையக்கூடாது . என்றார்.
ஆளுநர் இப்படி பேசலாமா என கேள்வி கேட்பார்கள். ஆளுநராக இருந்தாலும் நான் தமிழக்தின் மகள் என்பதை நினைவுப்படுத்துகின்றேன். என்றார். பட்டமளிப்பு விழாவில் காவியின் பலம் , கறுப்பின் பலம் என மாணவர்களிடையே பேசியது குறிப்பிடத்தக்கது.