டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க தயார்… உயர்நீதிமன்றத்தில் ED அந்தர் பல்டி..

ed chennai high court 1

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனைங்களை திரும்ப ஒப்படைக்க தயார் என்று அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் மது விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது. 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.


இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை மேற்கொண்டு சோதனை நடத்த தடை விதித்தது.

இதனிடையே டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் மே மாதம் திடீர் சோதனை நடத்தப்பட்டு, அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
அதே போல் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரத்தீஷ், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு இடமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் வீடு, அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது வீடு, அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்த்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் எவ்வாறு தொடர்புப்படுத்தப்படுகிறார்.. அதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என்று நீதிபதிகள் கூறினர்.. அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணமும், வாதமும் ஒத்துப்போகவில்லை என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து சீல் வைப்பது தொடர்பான நோட்டீஸை திரும்ப பெற்று கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனைங்களை திரும்ப ஒப்படைக்க தயார் என்றும் கூறியுள்ளது. ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரவீந்திரன் வீடுகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்படும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை உரிய பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Read More : திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…

RUPA

Next Post

ஈரான் சரண் அடையாது.. அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்க தயார்..!! - டிரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்த கமேனி

Wed Jun 18 , 2025
அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி […]
khamenei trump

You May Like