ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று (மே 29), நாளை (மே 30) தொடக்க பள்ளி ஆசிரியர் மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இன்று (மே 29) தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், நாளை (மே 30ஆம் தேதி) இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதேபோல் இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று (மே 29) கலந்தாய்வு நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

ஜூன் 14ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்..!! ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..!!

Mon May 29 , 2023
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் தற்போது காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுனர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை அமைக்க வேண்டும் என்றும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முறை பில் போடும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட […]
ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது..? புதிய கார்டு விண்ணப்பிப்பது இவ்வளவு ஈசியா..?

You May Like