தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று (மே 29), நாளை (மே 30) தொடக்க பள்ளி ஆசிரியர் மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (மே 29) தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், நாளை (மே 30ஆம் தேதி) இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதேபோல் இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று (மே 29) கலந்தாய்வு நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.