சென்னை விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு.. அவசரமாக தரையிறக்கம்..

IndiGo 4

சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது

இன்று காலை சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது. 62 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால் விமானம் பாதுகாப்பாக தரையிரங்கியது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.


முன்னதாக டெல்லியிலிருந்து லடாக்கின் லேவுக்குச் சென்ற 6E 2006 இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் காரணங்களால் அவசரமாகத் தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விமான ஊழியர்கள் உட்பட சுமார் 180 பேர் பயணித்த விமானம், லேவை நெருங்கிய சிறிது நேரத்திலேயே திரும்பி டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.

இதனிடையே சென்னையில் இருந்து டெல்லி, ஹைதராபாத், மும்பை, தூத்துக்குடி செல்லவிருந்த ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களின் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் 5 ஏர் இந்தியா விமானங்களும், 3 ஸ்பைஸ் ஜெட் விமானங்களும் ரத்து செய்யப்படன.

Read More : சென்னையில் தரையிறங்கிய விமானத்தில் மீண்டும் லேசா் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு..!!

RUPA

Next Post

ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்துமா ? ட்ரம்ப் அதிரடி முடிவு.. மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்..

Fri Jun 20 , 2025
US President Donald Trump has announced that he will decide within the next two weeks whether the United States will launch a direct military attack on Iran.
AFP 20250616 62LH9ND v1 HighRes G7Summit 1 1750233809 1

You May Like