ஒரே ஒரு கால் செய்வதன் மூலம் ஆதார் கார்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வது எவ்வாறு என்பதை பார்க்கலாம்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்வேறு பணிகளுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்றாகும். மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மட்டுமின்றி தனியார் நிதி நிறுவனங்களுக்கும் ஆதார் அட்டை அவசியமான ஒன்றாகிவிட்டது. உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்வதன் மூலம் அதை சரி செய்துவிடலாம்.
ஆதார் அட்டைதாரர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் 1947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் ஆதார் கார்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த சேவையானது மொத்தம் 12 மொழிகளில் வழங்கப்படுகிறது. தமிழ் மொழியிலும் இந்த சேவை இருக்கின்றது. எனவே பொதுமக்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்கும் அலையாமல் 1947 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் போதுமானது நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே உங்கள் ஆதார் அட்டை தொடர்பான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்.