மாருதி சுசூகி அனைத்து மாடல்களிலும் வாகனங்களின் விலையை சுமார் 1.1 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனம் Maruti Suzuki. இந்நிறுவனம் ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் சமீபத்திய ஒழுங்குமுறை தேவைகளால் உந்தப்பட்ட செலவு அழுத்தத்தை தொடர்ந்து விலை உயர்வை அதிகரித்துள்ளது. நிறுவனம் செலவினங்களைக் குறைப்பதற்கும், அதிகரிப்பை ஓரளவு ஈடுகட்டுவதற்கும் அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ளும் அதே வேளையில், விலை அதிகரிப்பின் மூலம் சில பாதிப்புகளைக் கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், மாருதி சுஸுகி அனைத்து மாடல்களிலும் வாகனங்களின் விலையை சுமார் 1.1 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
![சொன்னபடியே கார்களின் விலையை உயர்த்திய Maruti Suzuki..!! விலையை தெரிஞ்சிக்கிட்டு கார் வாங்கப் போங்க..!!](https://1newsnation.com/wp-content/uploads/2020/05/126260-teyisqygig-1569942353.jpg)
கடந்த ஆண்டு டிசம்பரில், அதிகரித்து வரும் கார் தயாரிப்பு செலவுகளின் தாக்கத்தை ஈடுகட்ட தனது வாகனங்களின் விலைகளை உயர்த்துவதாக கூறியிருந்தது. மாருதி சுசுகி நிறுவனம் சிறிய கார் ஆல்டோ தொடங்கி, எஸ்யூவி (SUV) கிராண்ட் விட்டாரா வரையிலான பல்வேறு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அவை ரூ. 3.39 லட்சம் முதல் ரூ. 19.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் உள்ளன. ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் ஆகியவையும் இந்த மாதம் முதல் விலையை உயர்த்துவதற்கான திட்டங்களை அறிவித்திருந்தன. ஏற்கனவே கூறியது போல ஜீப் இந்தியா நிறுவனம் 2 முதல் 4% சதவீதம் வரை விலை உயர்த்த உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் 5 % சதவீதம் வரையும், எம்.ஜி மோட்டார் நிறுவனம் தனது எஸ்யூவியின் விலையை ரூ.90,000 வரையும், கியா நிறுவனம் ரூ.50,000 வரையும், ஹோண்டா நிறுவனம் ரூ.30,000 உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.