fbpx

ஒரு மில்லியன் பயனர்களை இழந்த நெட்பிளிக்ஸ்..! திடீர் சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ், கடந்த 3 மாதங்களில் சுமார் ஒரு மில்லியன் பயனர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஓடிடி தளங்களிலேயே உலக அளவில் முன்னணியில் இருப்பது நெட்பிளிக்ஸ் தான். நெட்பிளிக்ஸ் உள்ள பல்வேறு நாடுகள் மற்றும் மொழிகளில் இருக்கும் திரைப்படங்கள், வெப் தொடர்களை காண்பதற்காகவே நெட்பிளிக்ஸை ஏராளமான பயனர்கள் விரும்பி சப்ஸ்கிரைப் செய்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களும் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்தன. அதிலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளமானது அசுரத் தனமான வளர்ச்சியை பெற்றது.

ஒரு மில்லியன் பயனர்களை இழந்த நெட்பிளிக்ஸ்..! திடீர் சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

ஆனால், கடந்த 3 மாதங்களில் சுமார் ஒரு மில்லியன் பயனர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பயனர்கள் தங்களது பாஸ்வேர்டை நண்பர்களிடம் பகிர்வதை தடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கொண்டு வந்தது. இதன் காரணமாகவே ஒரு மில்லியன் பயனர்களை நெட்பிளிக்ஸ் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்த காலாண்டில் சரிசெய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நெட்பிளிக்ஸ் – மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், குறைந்த விலையில் சப்ஸ்கிரிப்சன்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

Chella

Next Post

’மத்திய அரசு சொல்லும் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா’..? எஸ்.பி.வேலுமணி காட்டம்

Fri Jul 22 , 2022
மக்களை பற்றி கவலைக் கொள்ளாமல், விளம்பரத்திலேயே திமுகவினர் ஆட்சியை ஓட்டிக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசை கண்டித்து வரும் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அது தொடர்பாக கோவை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதய தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, “மக்கள் விரோத ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி வன்முறை […]
’மத்திய அரசு சொல்லும் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா’..? எஸ்.பி.வேலுமணி காட்டம்

You May Like