நாம் எதிர்பார்த்திருந்ததை விட மிக விரைவில்சோனி ப்ரீமியம் எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர உள்ளது.
சோனி அறிமுகப்படுத்தியுள்ள ப்ரீமியம் எலக்ட்ரிக் காருக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சோனி குழு நிறுவனம் மற்றும் ஹோண்டா மோட்டார் நிறுவனம் இணைந்து எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்து வருகின்றனர். முதலில் அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளுக்கு தங்களின் மாதிரியை விற்பனை செய்ய உள்ளது. இது 2026ம் ஆண்டுகளில் இருந்து மக்கள் வாங்கும் வகையில் தயாரித்து வருகின்றது. அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கு விற்பனை செய்யும் வகையில் திட்டமிட்டுள்ளது.
சோனி ஹோண்டா கூட்டு இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. சோனி ஏற்கனவே எலக்ட்ரானிக் பொருட்களின் வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் பைக், கார்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனம். இவை இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்துள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகின்றது. அந்த வரிசையில் இருவரும் இணைந்து எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்வது துணிகரமான செயல் . இது குறித்து சோனி ஹோண்டா தலைமை அதிகாரி கூறுகையில் ’’இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் இணைந்து கூட்டியக்கத்தில் தயாரிக்கின்றது. இரண்டு நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. சோனி உணர்திறன் தொழில்நுட்பத்திலும் ஹோண்டா தரமான இயக்க மேம்பாட்டிலும் தனித்திறமையை கொண்டுள்ளது. எனவேஇது வாடிக்கையாளர்களை நிச்சயம் வெகுவாக கவரும் ’’ என தெரிவித்துள்ளார்.
அடுத்து வரவுள்ள இந்த எலக்ட்ரிக் ப்ரீமியம் கார் மிகப்பெரிய அளவிலான சந்தையில் வாங்கக்கூடிய ஒன்றாக இருக்கும். எனவே மிகப்பெரிய ஆடம்பர கார்களுக்கு இது ஒரு அடியாக இருக்கும். சோனி , இந்த கார்களுக்கு மென்பொருள் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை உள்ளடக்கும். எனவே எலக்ட்ரிக் கார்களில் உள்ள அனைத்து மென்பொருள் தொழில்நுட்பத்திற்கும் சோனி பொறுப்பாகும். தானியங்கி கார்களில் உள்ள அனைத்து அம்சங்களையும் இந்த எலக்ட்ரிக் கார் கூடுதலாக பெற்றுள்ளது.