மியான்மரில் இருக்கும் பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மத்திய சகாயிங் பிராந்தியத்தில் இருக்கும் லெட் யெட் கோன் என்கிற கிராமத்தில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இங்குள்ள புத்த மடாலயத்தில் இருக்கும் பள்ளியின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஆர்டி வேர்ல்ட் என்கிற செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, துப்பாக்கிச் சூட்டில் சில குழந்தைகள் சம்பவ இடத்திலேயே துப்பாக்கி சூட்டில் கொலை செய்ய பட்டனர். மற்றவர்கள் ராணுவத்தினர் கிராமத்திற்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர்.
மேலும் இறந்தவர்களின் உடல்கள் பின்னர் இராணுவத்தால் 11 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 2020 பிப்ரவரி 1-ஆம் தேதி நடந்த சதிப்புரட்சியைத் தொடர்ந்து மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.