விமான விபத்து நடந்த பகுதியில் 1,000°C ஐ எட்டிய வெப்பநிலை.. பறவைகள், நாய்கள் கூட தப்பிக்க முடியல..

AA1GDoYB

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான தளத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வெப்பநிலை சுமார் 1,000 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது. இது மீட்புப் பணியை மிகவும் கடினமாக்கியது. மேலும் அப்பகுதிக்கு அருகில் உள்ள நாய்கள் மற்றும் பறவைகள் கூட சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத அளவுக்கு கடினமாக இருந்தது. மாநில பேரிடர் நிவாரணப் படை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ விபத்தின் தீவிரத்தைக் காட்ட அருகிலுள்ள நாய்கள் மற்றும் பறவைகளின் சடலங்களை சுட்டிக்காட்டினார்.


நேற்று விமான விபத்து நடந்த இடத்தில் வெப்பநிலை கிட்டத்தட்ட 1,000 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விமானத்திற்குள் இருந்த 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் தீப்பிடித்தது. விமானத்தின் எரிபொருள் தொட்டி வெடித்ததால், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வெப்பநிலை பேரழிவு தரும் அளவிற்கு உயர்ந்தது. இதனால் இந்த விபத்தில் இருந்து தப்பிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாறியது..

“விமானத்திற்குள் 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்தது, அது தீப்பிடித்தது, எனவே யாரையும் காப்பாற்றுவது சாத்தியமில்லை” என்று மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

விமானம் விபத்துக்குள்ளான பிஜே மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு, பிற்பகல் 2 முதல் 2:30 மணிக்குள் தங்கள் பணியாளர்கள் சென்றடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை வீரர் தெரிவித்தார். அதற்கு முன்பு, உள்ளூர்வாசிகள் சிலரை உயிருடன் மீட்டனர்.. ஆனால் தங்கள்து குழுவினரால் யாரையும் உயிருடன் மீட்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு படையில் சேர்ந்த மீட்புப்படை வீரர், இதற்கு முன்பு நெருக்கடி சூழ்நிலைகளைக் கையாண்டதாகவும், இதுபோன்ற பேரழிவை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும் கூறினார்.

மற்றொரு எஸ்டிஆர்எஃப் அதிகாரி, தான் அகற்றிய உடல்களின் எண்ணிக்கையை மறந்து விட்டதாக கூறினார். மோசமான சூழல் இருந்ததால் விலங்குகள் மற்றும் பறவைகள் கூட தப்பிக்க சிறிது நேரம் மட்டுமே கிடைத்தது..” என்று அவர் கூறினார்.

அகமதாபாத் விமான நிலையத்தில் என்ன நடந்தது?

நேற்று குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தியாவின் மிக மோசமான விமானப் போக்குவரத்து துயரங்களில் இந்த விபத்து மாறியது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 12.41 மணிக்கு, ஏர் இந்தியா விமானம் விபத்தில் 241 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது. 265 உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மெஸ் பகுதியில் மோதியதால், சுமார் 50 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம், கட்டிடத்தில் மோதி தீப்பிடித்து எரிந்ததால், காற்றில் அடர்த்தியான கரும்புகை பரவியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த துயரச் சம்பவத்தில் ஒருவர் உயிர் தப்பினார். இந்த விமானத்தில் வேறு ஒரு சிக்கலில் சிக்கிய தனது சகோதரர் அஜய் குமார் ராகேஷ் (45) உடன் இங்கிலாந்து திரும்பிக் கொண்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவர் விஸ்வாஷ் குமார் ரமேஷ் என அடையாளம் காணப்பட்டார்.

இந்த விமானத்தில் 232 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் இருந்தனர், இதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் ஆகியோர் அடங்குவர்.

8,200 மணிநேர அனுபவமுள்ள கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் 1,100 மணிநேர அனுபவமுள்ள முதல் அதிகாரி கிளைவ் குந்தர் ஆகியோரால் இந்த விமானம் இயக்கப்பட்டது. விமானம் விபத்துக்கு சற்று முன்பு ஒரு Mayday என்ற அவசரகால அழைப்பை மேற்கொண்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Read More : விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.. இது ஏன் முக்கியம்? இந்த பெட்டியில் என்ன இருக்கும்?

RUPA

Next Post

ரஜினியின் கூலி படம் முழுக்க விசில் பறக்கும்.. லோகேஷ் கனகராஜை புகழ்ந்து தள்ளிய நாகார்ஜுனா..

Fri Jun 13 , 2025
ரஜினியின் கூலி படம் முழுக்க விசில் பறக்கும் என்று தெரிவித்துள்ள நடிகர் நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜை பாராட்டி பேசி உள்ளார். நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. ஒன்று.. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா’, மற்றொன்று லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நாகார்ஜுனா ஒரு முக்கிய […]
akkineni nagarjuna 130223125

You May Like