மோடியின் நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது….காஷ்மீரில் அமித்ஷா பேச்சு !

ஸ்ரீநகரில் தீவிரவாதிகளுக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் முன்பை விட தற்போது பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளது என அமித்ஷா பேசியுள்ளார்.


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு – காஷ்மீர் சென்றார். ரஜோரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர்அங்கு பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் , ’’ஜம்மு காஷ்மீர் மாநலமாக இருந்தபோது 3 குடும்பம் மட்டுமே ஆட்சி செய்தது. ஆனால் , தற்போது பஞ்சாயத் , மாவட்ட கவுன்சில்களுக்கு நடந்த நியாயமாக தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு மத்திய அரசு அளித்த நிதி அனைத்தும் ஒரு சிலரால் அபரிக்கப்பட்டது என கூறினார். ’’

இந்த 3 குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரை விடுவித்து மோடியின் கரத்தை ஜம்மு நலனுக்காக வலுப்படுத்தவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்தால் ரத்த ஆறு ஓடும் என்றனர். இன்றைய பேரணியும் இங்கு ஒலிக்கும் மோடி கோஷமும் .. ரத்த ஆறு ஓடும் என பேசியவர்களுக்கு பதிலடியாக உள்ளது என்றார்.

Next Post

என்னை காப்பாத்துங்க! குவைத்தில் கதறும் தமிழகப் பெண்…

Tue Oct 4 , 2022
குவைத்தில் வேலை பார்த்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காப்பாற்றுமாறு கோரி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது… சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த புவனா (37)  இவரது  கணவர் ஜேம்ஸ்பால். இவரது  நண்பர் ஜான்சன் என்பவரின் அறிவுரைப்படி குழந்தை பராமரிப்பு வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சேர கூடுதல் பணம் அவசியம் இருக்காது எனக்கூறியதால் புவனா இந்த வேலைக்கு சென்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் ஒருமாத்திலேயே […]
குவைத்பெண்

You May Like