குண்டுவெடிப்பு வழக்கு: 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதி கைது.. தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

Terrorist

1990களில் தென்னிந்தியாவில் பல வெடிகுண்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதி அபுபக்கர் சித்திக், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது அலியும் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) பல மாதங்களாக மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இருவரும் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய வெடிகுண்டு வெடிப்பில் தொடர்பு:

1995: சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிப்பு.

1995: நாகூர் தங்கம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு.

1999: சென்னை, திருச்சி, கோவை, கேரளா உள்ளிட்ட 7 இடங்களில் ஒரே நாளில் வெடிகுண்டு வெடிப்பு.

2011: மதுரை – திருமங்கலம் வழியாக சென்ற முன்னாள் பிரதமர் எல்.கே. அத்வானி ரதயாத்திரையை குறிவைத்த பைப் பாம் வழக்கு.

2012: வேலூர் மருத்துவர்கள் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு.

2013: பெங்களூர் பாஜக அலுவலகம் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதல்.

30 ஆண்டுகளாக தமிழக போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ரகசிய தகவலின் பேரில் ஆந்திராவில் போலீசார் கைது செய்துள்ளனர். அதே​போல், 1999-ல் தமிழகம் மற்​றும் கேரளா​வில் 7 இடங்​களில் வெடிகுண்​டு​கள் வைத்த வழக்​கில் 26 ஆண்​டு​களாக தலைமறை​வாக இருந்த குற்​ற​வாளி​யான திருநெல்​வேலி மேலப்​பாளை​யத்​தைச் சேர்ந்த முகமது அலி (எ) யூனுஸ் (எ) மன்​சூரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

இதையடுத்​து, சென்னை நீதி​மன்​றம் பிறப்​பித்த பிடி​யாணை அடிப்​படை​யில், இரு​வரும் தீவிர​வாத தடுப்​புப் படை​யின​ரால் நீதி​மன்ற காவலுக்கு உட்​படுத்​தப்​பட்​டனர். இந்தக் கைது, 1990களில் தென்னிந்தியாவை உலுக்கிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாகக் பார்க்கப்படுகிறது.

Read more: தோனியை விட 4 மடங்கு அதிக சம்பளம்!. RR கேப்டனுக்கு வலைவீசும் CSK?. உண்மை என்ன?.

Next Post

“குற்றவாளிகள் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்..” பஹல்காம் தாக்குதலுக்கு குவாட் தலைவர்கள் கண்டனம்..

Wed Jul 2 , 2025
ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு குவாட் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து குவாட் குழுவின் (அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) வெளியுறவு அமைச்சர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். கண்டிக்கத்தக்க செயலுக்கு பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் “ எல்லை தாண்டிய […]
20250702024018 quad foreign ministers jaishankar rubio Iwaya Takeshi penny wong

You May Like