’அந்த மனசு இருக்கே’..!! கோமாவில் இருந்த கணவர் குணமானதால் நன்கொடையை மீண்டும் திருப்பித் தர மனைவி முடிவு..!!

கடந்த 3 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கணவர், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால், சமூக இணையதள விளம்பரம் மூலம் கிடைத்த ரூ.21 லட்சம் நன்கொடையை திருப்பி அளிக்க சீன பெண் முடிவு செய்துள்ளார்.


கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசிப்பவர் ஜியாங் லீ. இவரது மனைவி டிங். கடந்த 2020இல் நடந்த கார் விபத்தில், ஜியாங் லீ கோமா நிலைக்கு சென்றார். அவரை, அவரது மனைவி டிங் உடனிருந்து கடந்த 3 ஆண்டுகளாக கவனித்து வந்தார். ஜியாங் லீயின் மருத்துவ செலவினங்களுக்கு சேமிப்பு பணம் முழுவதும் காலியானது. இதனால், சமூக இணையதளம் மூலம் தனது கணவரின் நிலையை எடுத்துக் கூறி நிதி திரட்டினார் மனைவி டிங்.

மொத்தம் 4,055 நன்கொடையாளர்கள் நிதியுதவி வழங்கியதில், ரூ.21 லட்சம் கிடைத்தது. அதோடு, ஜியாங் லீ விரைவில் குணமடைவார் என்ற ஆறுதல் தகவல்களையும் நன்கொடையாளர்கள் டிங்குக்கு அனுப்பி வந்துள்ளனர். இது டிங்கை மிகவும் நெகிழவைத்தது. ஜியாங் லீ மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் மிகக் குறைவு என மருத்துவர்கள் தெரிவித்த போதிலும், கணவர் ஜியாங் லீயை அக்கறையுடன் கவனித்து வந்தார் டிங். அவரது உடலை படுக்கையில் திருப்பிப் போட்டு மசாஜ் செய்வது, கை, கால்களை அசைப்பது போன்ற பயிற்சிகளையும் அவர் தொடர்ந்து அளித்து வந்துள்ளார்.

இதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. மனைவி கூறுவதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. நடப்பது, பல் துலக்குவது, பேசுவது போன்ற பயிற்சிகளை டிங் அளித்தார். இதனால் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் கணவர் ஜியாங் லீ. இந்த மகிழ்ச்சியான தகவலை சமூக இணையதளத்தில் தெரிவித்துள்ள டிங், நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர் பெற்ற நன்கொடை களை திரும்பச் செலுத்தும் முடிவையும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

CHELLA

Next Post

காதலனுடன் ஓட்டம்..!! பிரித்து வைத்த பெற்றோர்..!! மறுநாளே எரிந்த சடலம்..!! ஆணவக்கொலை..!!

Sun Jun 18 , 2023
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி பகுதியைச் சேர்ந்த நேத்ராவதி என்ற 17 வயது சிறுமி, சிராவில் உள்ள கல்லூரியில் பி.யூ.சி. படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் குமார் (21) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். ஆனால், இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதனால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காதலை கைவிடும்படி நேத்ராவதியை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும், […]

You May Like