Flash : தமிழ்நாட்டை உலுக்கிய அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஞானசேகரன் மீதான குண்டாஸ் ரத்து..!

anna university rape case 11zon

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது..

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்ய நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதே சமயம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.. வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டம் ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஞானசேகரின் தாயார் கங்கா தேவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..

Read More : “நம்ம தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்.. ஆணுறை வேண்டாம்”..!! இன்ஸ்டாவால் பறிபோன சிறுமியின் உயிர்..!! போதையில் காதலனுடன் செய்த லீலைகள்..!!

English Summary

The order to detain Gnanasekharan under the Goondas Act in the Anna University student sexual assault case has been quashed.

RUPA

Next Post

கள்ளக்காதலியை போட்டுத் தள்ள மனைவியிடமே ஐடியா கேட்ட கணவன்..!! பின்வாசல் வழியாக வந்த உருவம்..!! அடுத்து நடந்த பயங்கர சம்பவம்..!!

Mon Dec 15 , 2025
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இவருடைய கணவர் பால் வியாபாரம் செய்து வந்தார். தினமும் அதிகாலை 5 மணிக்கு வியாபாரத்திற்குச் சென்றால், இரவு 10 மணிக்கே திரும்புவார். இந்தக் கால அவகாசத்தில், சீதாவுக்கு எதிர் வீட்டில் வசித்த மோகித் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பழக்கம், நாளடைவில் தகாத உறவாக மாறியது. இருவரும் […]
Sex 2025 2

You May Like