“என் உடலில் ஓடும் ரத்தம் விஜய்க்கு தான்.. வழி தெரியாமல் இருந்த எனக்கு வழிகாட்டியவர்..” செங்கோட்டையன் உருக்கம்..!

tvk vijay sengottaiyan 1

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் பலர் தவெகவில் இணைந்தனர்..


இந்த நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன் “ அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் வரும்.. ஆனால் வேகம் இருக்காது.. ஆனால் ஆர்ப்பரிக்கும் இந்த கூட்டம் தவெகவின் தலைவர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூடுகிறது.. பெரும்பாலான அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வருபவர்கள் 1 அல்லது 2 மணி நேரத்தில் எழுந்து சென்று பாதி நாற்காலிகள் காலியாக இருக்கும்.. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தேவையில்லை நமது தலைவர் தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று இளைஞர்கள் வருகின்றனர்..

இந்த கூட்டத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.. இந்த கூட்டத்தை பார்த்து ஆளும், எதிர்க்கட்சியினர் தேர்தல் களத்தில் நிற்கலாமா? வேண்டாமா என்ற அச்சத்தில் உள்ளனர்.. அவர்களின் பிப்ரவரி மாதத்திற்கு பின் தேர்தலில் நிற்க ஆள் தேடுவார்கள்.. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்..

ஆண்டுக்கு ரூ.1000 கோடி சம்பாதிப்பவர் சம்பாத்தியம் தேவையில்லை.. மக்கள் நலன் தான் முக்கியம் என்று வந்துள்ளார்.. மே மாதத்திற்கு பின் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியே அமையும்.. பணம் இல்லாமல் சேர்ந்த கூட்டம் இது.. இங்கு நீதி, நியாயம் இருக்கிறது.. தமிழகத்தில் ஜனவரி 15-ம் தேதிக்கு பிறகு நிறைய மாற்றங்கள் நடக்கும். எப்போது தேர்தல் வந்தாலும் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக விஜய் இருப்பார்..

வழி தெரியாமல் இருக்கின்ற போது, நமக்கு வழிகாட்டியவர் விஜய்.. இன்றைக்கு சொல்கிரேன்.. எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்கு தான். கேட்காமலே நமக்கு கொடுக்கக்கூடிய தளபதி நமக்கு கிடைத்துள்ளார். அவர் தான் நமது வெற்றி தளபதி. ஜெயலலிதா உடன் பயணித்த போது நான் ஒருவரை அடையாளம் காட்டினேன்.. ஆனால் அவர் இன்று என்னை அடையாளம் காட்டிவிட்டு சென்றுவிட்டார்.. நல்ல இடத்திற்கு போங்கள் என அடையாளம் காட்டி உள்ளார்.. இதனால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.. உங்களுடன் பயணிப்பதால் முன்னோக்கி சென்றுள்ளேன்..” என்று கூறினார்..

Read More : Breaking : ஒரே நாளில் ரூ.20,000 விலை உயர்வு.. தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்..! பேரதிர்ச்சியில் பொதுமக்கள்..!

RUPA

Next Post

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகள்.. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி.. பெரும் சோகம்..!

Sat Dec 27 , 2025
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோழித்தீவனம் ஏற்றி சென்ற லோடு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. லோடு லாரி பள்ளத்திற்குள் பாய்ந்ததில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மற்றும் ஓட்டுநர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மாடுகள் சாலையை கடந்த போது லாரியில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. […]
accident

You May Like