திருமணமான இளம்பெண்ணை கடத்தி, அறையில் அடைத்து வைத்து நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்து வந்த காமக்கொடூரனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் பல இடங்களில் பெண்கள் துன்புறுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெண்கள் தனியாக அகப்படும் நேரங்களில் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அவலம் தொடர்கிறது. சில இடங்களில் அவர்களை பாதுகாக்க வேண்டிய குடும்ப உறுப்பினர்களாலேயே பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகளும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் திருமணமான 25 வயது இளம்பெண்ணை, ஒருவன் பல நாட்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை கண்டு அவன், வீட்டுக்குள் நுழைந்து இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளான். மேலும், அதை வீடியோவாக எடுத்து, அதைக் காட்டி மிரட்டி அடிக்கடி அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். இந்நிலையில்தான் அந்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த கொடூரன், அந்த பெண்ணை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து, கை-கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். ஒரு நாள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறியதாக தெரிகிறது.

இரவு வெகுநேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரது கணவர், காவல் நிலைத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர். அப்போது, ஒரு வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிகவும் கொடூரமாக கிடந்துள்ளார் அந்த பெண். இதையடுத்து, அவரை மீட்ட காவல்துறையினர், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய கொடூரனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.