நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கில், ஓய்வுபெற்ற அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜோயல் லே. இவருக்கு வயது 74. இவர் தலைநகர் பாரீசில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகவும், தலைமை அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, பணியில் இருந்து ஓய்வு பெற்று தனியாக கிளினிக் வைத்தும் நடத்தி வந்தார். இந்நிலையில், ஜோயல் லே, அரசு மருத்துவராக இருந்தபோது, தன்னிடம் சிகிச்சைக்காக பெற வந்த ஏராளமான சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், அவர்களை கட்டாயப்படுத்தியும் மருத்துவர் ஜோயல் லே, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜோயல் லேவை கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுமார் 15 வருடங்களாக சிறையில் அவர் அடைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது, விசாரணை அறிக்கையை காவல்துறை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், ஓய்வுபெற்ற மருத்துவரான ஜோயல் லே, பணியில் இருந்தபோது சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இவை அனைத்தும் 1989 முதல் 2014 வரையிலான காலகட்டங்களில் நடந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து பிரெஞ்சு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், மேலும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.