அமெரிக்காவை உலுக்கிய மயான மோசடி..!! 200 சடலங்களை அழுகவிட்டு ஆடம்பர வாழ்க்கை..!! அதிரவைத்த தம்பதி..!!

America Crime 2026

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ‘ரிட்டர்ன் டு நேச்சர்’ (Return to Nature) என்ற பெயரில் மயான காப்பகம் நடத்தி வந்த தம்பதியினர், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் சிதைத்து, அவர்களின் உறவினர்களை ஏமாற்றிய கொடூரமான மோசடி உலக நாடுகளை உலுக்கியுள்ளது. மனிதாபிமானத்தை மறந்த ஜான் ஹால்ஃபோர்ட் மற்றும் அவரது மனைவி கேரி ஹால்ஃபோர்ட் ஆகியோரின் இந்த வக்கிரம் நிறைந்த செயல், தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கி தண்டனை வரை வந்துள்ளது.


கடந்த 4 ஆண்டுகளாக, எரிக்கவோ அல்லது அடக்கம் செய்யவோ தங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட சுமார் 190-க்கும் மேற்பட்ட உடல்களை, பென்ரோஸ் நகரில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இத்தம்பதியினர் போட்டு வைத்துள்ளனர். 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம், அந்தப் பகுதியிலிருந்து வீசிய சகிக்க முடியாத துர்நாற்றம் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தபோதுதான் இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

போலீசார் அங்கு நுழைந்தபோது, கட்டிடத்திற்குள் மலைபோல் குவிந்து கிடந்த அழுகிய சடலங்களைக் கண்டு உறைந்து போயினர். உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்திருந்ததால், கைரேகை மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலமே அவை யாருடையவை என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

இவர்களின் மோசடி இத்துடன் முடிந்துவிடவில்லை. உடல்களைத் தகனம் செய்துவிட்டதாகக் கூறி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் எலும்புச் சாம்பலுக்குப் பதிலாக காய்ந்த சிமெண்ட் பொடியை வழங்கி ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு பொதுமக்களின் துயரத்தைப் பணமாக்கிய இந்த தம்பதியினர், அந்தத் தொகையைக் கொண்டு கிரிப்டோகரன்சி முதலீடு, வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது என சுகபோகமாக வாழ்ந்து வந்தது விசாரணையில் அம்பலமானது.

இந்த கொடூர வழக்கை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், ஜான் ஹால்ஃபோர்டிற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இவர் பல்வேறு மோசடி வழக்குகளுக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலையில், தற்போது இந்த மனிதநேயமற்ற செயலுக்காகக் கூடுதல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவரது மனைவி கேரிக்கான தண்டனை விவரங்கள் வரும் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட உள்ளன.

Read More : “அரசு வேலையை ராஜினாமா செய்தால் பென்ஷன் கிடையாது”..!! முரண்பட்ட தீர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐகோர்ட்..!!

CHELLA

Next Post

கள்ளக்காதலை மன்னித்த கணவனுக்கு மரணத்தை பரிசாக கொடுத்த மனைவி..!! அதிமுக நிர்வாகி படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்..!!

Sun Feb 8 , 2026
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே, கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, மனைவியே கூலிப்படை ஏவிக் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செந்தில்குமார், தனது மனைவி காவ்யாவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதை அறிந்தும், குடும்ப நலன் கருதி அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் காவ்யா வீட்டை விட்டு ஓடியபோது, பெரியோர்கள் முன்னிலையில் சமரசம் பேசி செந்தில்குமார் […]
Sex 2025 1

You May Like