எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு..!! மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு..!! வெளியானது அறிவிப்பு..!!

மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


தேசிய மருத்துவ ஆணையம் அடுத்த ஆண்டு முதல், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்த உள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, இத்தேர்வை கைவிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். நெக்ஸ்ட் தேர்வு கிராமப்புற, சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் ஒத்திவைத்தது. மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும் வரை நெக்ஸ்ட் தேர்வு நடைபெறாது. மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து அடுத்த அறிவுறுத்தல் வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

பெற்றோர்களே கவனம்..!! படிக்க வந்த மாணவியை பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர்..!! ராணிப்பேட்டையில் அதிர்ச்சி

Thu Jul 13 , 2023
பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்து வந்த டியூசன் ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (40). இவர், தோல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மாலையில் தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், செந்தில்நாதனுக்கு டியூசன் சென்டருக்கு படிக்க வந்த 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த […]
பெற்றோர்களே கவனம்..!! படிக்க வந்த மாணவியை பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர்..!! ராணிப்பேட்டையில் அதிர்ச்சி

You May Like