மக்களே…! மாநிலம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டணம்…! முழு விவரம்…

பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று முதல் உயர்த்தப்பட உள்ளன.

பதிவுச்சட்டம்‌, 1908-இன்‌ பிரிவு 78-இல்‌ கட்டண விவர அட்டவணையில்‌ உள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும்‌ சில ஆவணப்‌ பதிவுகளுக்கான பதிவு மற்றும்‌ முத்திரை கட்டண வீதங்களும்‌ திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம்‌ 20 ரூபாயில்‌ இருந்து 200 ரூபாய்‌ எனவும்‌, குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட்‌, பாகம்‌ மற்றும்‌ விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம்‌ ரூ.4,000 இருந்து ரூ.10,000 என மாற்றப்பட்டவுள்ளது.


மேலும்‌, அதிகபட்ச முத்திரை தீர்வை 25ஆயிரம்‌ ரூபாயில்‌ இருந்து 40 ஆயிரம்‌ ரூபாய்‌ எனவும்‌, தனி மனை பதிவிற்கானகட்டணம்‌ 200 ரூபாயில்‌ இருந்து ஆயிரம்‌ ரூபாய்‌ எனவும்‌, குடும்ப உறுப்பினர்கள்‌ அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக்‌ கட்டணம்‌ 10 ஆயிரம்‌ ரூபாய்‌ என்று உள்ளதை சொத்தின்‌ சந்தை மதிப்பிற்கு ஒரு விழுக்காடு எனவும்‌ மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில்‌ அடங்கும்‌. இவை, நாளை முதல்‌ நடைமுறைக்கு வரவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உலகக் கோப்பை ஒருநாள் போட்டி!... குவாலிபையர் பைனலில் நெதர்லாந்தை பந்தாடிய இலங்கை! 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Mon Jul 10 , 2023
ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்று பைனலில் நெதர்லாந்து அணியுடன் மோதிய இலங்கை அணி 128 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஜிம்பாப்வேயில் நடந்த ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் தொடரின் சூப்பர் 6 சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இலங்கை – நெதர்லாந்து அணிகள், இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றன. இந்த நிலையில், இரு அணிகளும் தகுதிச்சுற்றின் பைனல் […]
srilanka icc world cup

You May Like