“மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின்.. திமுகவை நிச்சயம் தோற்கடிப்பார்கள்..” இபிஎஸ் காட்டம்..!

stalin eps

அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.. அதன்படி அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பெறும் மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்..


மேலும் “ 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.. 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்வு தரப்படும்.. ஓய்வூதியதார இறந்தார் அவர் பெற்ற ஓய்வூதியத்த்ல் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். பணிகாலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வுபெற்றாலும் குறைந்தபட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்..

அரசு அலுவலர்கள் உயிரிழந்தால் 20 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.. ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.. புதிய திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறுவோருக்கு கருணை ஊதியம் வழங்கப்படும்..” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஜனவரி முதல் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதுவும் செய்யாமல், அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது இந்த விடியா திமுக அரசு.

‘ஒன்றிய அரசு, குன்றிய அரசு’ என்று எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்’ (Unified Pension Scheme) பெயரை மாற்றிவிட்டு, தற்போது தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.

பழைய ஒய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அரசு ஊழியர்களை இதுவரை ஏமாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும். அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிப்பதற்கும், பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின். இச்செயல் ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

எனவே, எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதை பல அரசு ஊழியர்கள் உணர்ந்திருந்தாலும், இனிப்பு என்ற பெயரில் பொய்யை மூடி மறைத்த சங்க நிர்வாகிகள், புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்வார்கள். அதற்கு வரும் தேர்தலில் திமுக-வை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Read More : இது வரம்பற்ற செயல்.. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது; காங். நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!

RUPA

Next Post

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும்..! 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று..! வானிலை மையம் அலர்ட்..!

Sun Jan 11 , 2026
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று முன் தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடகிழக்கு இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஜனவரி 11, 2026-க்குள் மழைப்பொழிவு படிப்படியாகக் குறையும், இருப்பினும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை தொடரும், மேலும் ஓரிரு இடங்களில் […]
rain

You May Like